ஏன் கலக்கம்?

ஏன் கலக்கம்?

இறைவாக்கு: யோவான் 13:21-22.

  1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.
  2. அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.

இறை வாழ்வு:

உடன் இருந்தும் உணர்வடையாமல்,
ஒழிந்து போவோன் நிலை கண்டு,
திடன் இருந்தும், தெரியுமிழப்பால்,
தெய்வ மகனே கலங்குகிறார்.
இடர் கொடுத்தும், ஏய்த்து பெருத்தும்,
இழந்து போவோர் தலை கண்டு,
அடர் நமக்கு ஒன்றும் வேண்டாம்;
அன்பு இறையே கலங்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.