உதவுவோம்!

உதவாதிருந்தேனே!

இன்னும் அன்பாய் நன்மைகளீந்து
எளியருக்குதவாதுதறினேனே;
என்னும் எண்ணம் பன்முறை வந்து,
என்னை அழுத்தப் பதறினேனே.
பின்னால் தொடரும் தீதால் அழியும்,
பிறவியைத் திருத்தக் கதறினேனே.
முன்னால் நின்று, அருளைப் பொழியும்,
மும்மையாரால் இனி உதவுவேனே!

-கெர்சோம் செல்லையா.