இப்போது வரயியலாது!

இப்போது வரயியலாது!

இறைவாக்கு: யோவான் 13: 33.

  1. பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

இறையறிவு:

இப்போது வர இயலாவிடினும்,
இன்னொரு நாள் வருவனே.
அப்போது உம்மிடம் வந்ததும்
ஆவியை பாவி தருவனே.
எப்போது ஆயினும் ஆயத்தம்
என்று கூறுதல் அருமையே.
தற்போது உம் திரு வாக்கருளும்;
தரணிக்கதுதான் பெருமையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.