ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,

இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.

ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,

உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.

பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,

பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.

மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,

மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.