கொரோனா கூறும் செய்தி!

கொரோனா கூறும் செய்தி!


என்னால் கூடும், யாவும் கூடும்;

என்பது அல்ல, இறைவேண்டல்.

தன்னால் அல்ல, இறையால் கூடும்;

தாழ்ந்து சொல்வதே, இறைவேண்டல்.

முன்னால் நிற்கும் நோயும் கூறும்,

முதற்கண் தேவை, இறைவேண்டல்.

சொன்னால் கேட்கும், நாடே மகிழும்;

சொல்வோம் நாமும், இறைவேண்டல்!


-கெர்சோம் செல்லையா.

கள்ளனை ஏற்கும் வள்ளன்!

கள்ளனை ஏற்கும் வள்ளன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:7-8.

7   பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.

8   அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

தப்புக் கணக்கு, எழுதி வைத்து,

தப்பமுயன்றான், ஒரு கள்ளன்.

ஒப்புக்கொண்டு, உச்சி முகர்ந்து,

உயர்த்துகின்றான், ஒரு வள்ளன்.

துப்புத் துலக்கி, ஆயும் முன்பு,

தெரியுமிவனே, அக்கள்ளன்.

செப்பும் எளியன் இழிவு கண்டு,

சேர்க்குமிறையே, அவ்வள்ளன்.

ஆமென்.