கொன்று போடும் கொடுங்கணக்கு!

கொரோனா போன்ற கொடுங்கணக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா16:3-6.
3   அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.

4   உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

5   தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.

6   அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

இன்று நீங்கள் எழுதும் கணக்கு,

எப்படிப்பட்டது எனக்கேட்டால்,

நின்று நாமும், நேர்மையென்று,

நிமிர்ந்து சொல்ல இயலாதே!

தொன்றுதொட்டு, தூய்மையற்று,

தொடர்ந்து எழுதும் பொய்க்கணக்கு,

கொன்றுபோடும் கொரோனாவாகும்;

கொடுமையில் செல்ல முயலாதே!

ஆமென்.