நமது பார்வை!

எப்படிப் பிறரைப் பார்க்கிறோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:1-2.

1   சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

2   அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

எதிரே நிற்போர் ஏழை என்றால்,

எவரும் திரும்பிப் பாராரே.

புதிரை நம்பும் சாதியர்கூட,

புனிதம் பேசிச் சேராரே.

மதிப்பார் என்ற சொல்லினுள்ளே,

மதி இருத்தல் அறியாரே,

விதிக்காக நான் சொல்லவில்லை;

விண்முன் யாவரும் சிறியாரே!

ஆமென்.