கொரோனா!

தொற்றாது தொற்று நோய்!

இறைவாக்கு: சங்கீதம்/திருப்பாடல் 91

இறைவேண்டல்:

இத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்வாய்,

என்று அனுப்பிய என் இறையே,

அத்தனை காலம் நலமாய் வாழ்வேன்,

அதனால் இல்லை, ஒரு குறையே.

எத்தனை விதமாய் நோய் வந்தாலும்,

எனக்கு மருந்து உன் மறையே.

பித்தன் என்று பிறர் பழித்தாலும்,

பெருகும் அருளால் எனை நிறையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.