கொரோனா கூறும் செய்தி!

கொரோனா கூறும் செய்தி!


என்னால் கூடும், யாவும் கூடும்;

என்பது அல்ல, இறைவேண்டல்.

தன்னால் அல்ல, இறையால் கூடும்;

தாழ்ந்து சொல்வதே, இறைவேண்டல்.

முன்னால் நிற்கும் நோயும் கூறும்,

முதற்கண் தேவை, இறைவேண்டல்.

சொன்னால் கேட்கும், நாடே மகிழும்;

சொல்வோம் நாமும், இறைவேண்டல்!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply