பழுத்த அன்பு!

பழுத்த அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15: 18-20.

18  நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

19  இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

20  எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அழுக்கு உடையில், அவல வடிவில்,

ஆங்கே ஒருவன் தெரிகின்றான்.

கழுத்து நீட்டிக் காத்தவன் தந்தை,

கண்டு மகனென அறிகின்றான்.

இழுத்து மூடி, ஒளித்திராமல்,

எழுந்து ஓடி அணைக்கின்றான்.

பழுத்த அன்பு, தந்தையில் கண்டேன்;

பரமனும் இதுபோல் இணைக்கின்றான்!

ஆமென்.