எனக்கீந்தத் திருக்கொடைகள்!

Image result for luke 16:1-2
Image result for luke 16:1-2

எனக்கீந்தத் திருக்கொடைகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:1-2.

1   பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

2   அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒப்புவித்த உடமைகளில்,

ஒருங்கிணைந்த கடமைகளில்,

தப்பிதமாய் நானிருப்பின்,

தடுக்கிறதே, உம் ஆவி.

இப்புவியின் வாழ்க்கையினில்,

எனக்கீந்தத் திருக்கொடைகள்,

எப்பொழுதும் உம் புகழே;

இலாவிடில், நான் பாவி!

ஆமென்.