அன்பற்ற அண்ணன்!

அன்பற்ற அண்ணன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:25-28.

25 அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.27 அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.28 அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒழுக்கம் நேர்மை ஊருக்குரைக்கும்,

உள்ளில் அன்பு இல்லையெனில்,

புழுக்கம் கொண்டு, புண்ணாகிடுமே;

புரிந்து, நன்மை செய்வோமா?

அழுக்கை முதற்கண் தன்னிலகற்றும்,

அரிய பண்பு இல்லையெனில்,

மழுக்கம் கண்டு, மண்ணாகிடுமே;

மனம் திரும்பி உய்வோமா?

ஆமென்.