இயேசுவே எனது நல்மேய்ப்பர்

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:3-4.

3   அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

4   உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கிறித்துவில் வாழ்வு:

ஒராடுதானே ஓடியதென்று,

ஓய்ந்திருப்பானோ ஒரு மேய்ப்பன்?

போராடியேனும் அதனை மீட்க,

புறப்படுவானே நம் மேய்ப்பன்.

யாராயிருப்பினும் புறக்கணிக்காது,

எழுந்து மீட்கிறார் இறை மேய்ப்பன்.

நூறாயிரம் பாடல் எழுதிச் சொல்வேன்;

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

ஆமென்.