ஊரடங்கு!

ஊரடங்கு!
அடங்க மறுத்துப் போவோர் செல்லும்,
அழகிய சென்னைச் சாலைகளை,
முடங்க வைத்து, அறிவுரையூட்டும்
முதல் ஆசான் குரோனாவாம்.
கிடங்கு போலப் பிறரது இடத்தில்,
கொட்டும் நமது குப்பைகளை,
சடங்கு செய்தல் போலகற்றின்,
சாவு எப்படி வருவானாம்?

-கெர்சோம் செல்லையா.

கொடுக்கும் இறையைத் தடுக்காதே!

தடுக்கும் மனிதனும், கொடுக்கும் இறையும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:29-32.

29  அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

30  வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

31  அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32  உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

தம்பிகள் மீள்வதைத் தடுக்கும் மனிதர்,

தரணியில் பலபேர் உண்டய்யா.

வெம்பிடும் ஏழையர் வாழ்வடைவர்,

விண்ணின் அணைப்பு கொண்டய்யா.

நம்பிடும் அடியர் மகிழ்ந்துரைப்பர்,

நற்செய்தியாலே மீளய்யா.

எம்பிரான் இயேசு இறையரசர்;

எம்மை என்றும் ஆளய்யா!

ஆமென்.