போதும், உனது கையை நிறுத்து!

போதும் உந்தன் கையை நிறுத்து!

“தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். (2 சாமுவேல் 24:16)

சூதும் வாதும் பெருகியபோது,

சொற்படி வாதை வந்தது அன்று.

ஏதும் அறியார் இறப்பது கண்டு,

ஏங்கினார்கள் இறைவனின் முன்பு.

‘போதும் உனது கையை நிறுத்து’,

பொழிந்த அருளால், தோற்றது தொற்று.

தீதும் துன்பும் அதுபோல் இன்று,

தொலைவதற்கு இறையை வேண்டு!

-கெர்சோம் செல்லையா.