மதியிலார் நிலை!

மதியிலார் நிலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:13-15.

13  சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

14  எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

15  அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:

தந்தையின் அன்பை ருசிக்கும் வேளை,

தருவது குறைவென நினைப்போரே,

சொந்தக் கைகள் செய்யும் வேலை,

சொல்கிற செய்தியும் நினைப்பீரே.

அந்தத் தொழிலை இழிவாய்க் கருதி,

அவன் நிலைக்காக அழுவோரே,

மைந்தன் ஒருவன் அடிமையாகும்,

மதி இழப்பிற்கும் அழுவீரே!

ஆமென்.