ஊரடங்கு!

ஊரடங்கு!
அடங்க மறுத்துப் போவோர் செல்லும்,
அழகிய சென்னைச் சாலைகளை,
முடங்க வைத்து, அறிவுரையூட்டும்
முதல் ஆசான் குரோனாவாம்.
கிடங்கு போலப் பிறரது இடத்தில்,
கொட்டும் நமது குப்பைகளை,
சடங்கு செய்தல் போலகற்றின்,
சாவு எப்படி வருவானாம்?

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply