உணவு தரும் ஆயர்!

உணவு தரும் ஆயர்!

இறைமொழி: 21:7-8.

7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

8. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள்.

இறை வழி:

வசிக்க இடமின்றி வாழ்ந்தவர் அன்று,

வழி தவறியவரைத் தேடினார்.

புசிக்க ஏதேனும் உண்டோ வென்று,

புரியா அடியரையும் நாடினார்.

ருசிக்க ஒன்றும் இல்லார் கண்டு,

தெய்வமும் பசியிலே வாடினார்.

கசக்குமுண்மை, கண்டவர் உண்டு;

காய்ந்தவர் உண்டிடக் கூடினார்!

ஆமென்.

May be an image of 1 person