நம்பிக்கையோடு நிற்றல்!

நம்பிக்கையோடு நிற்றல்!

இறை மொழி: யோவான் 20:11-13.

11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

இறை வழி:

நம்பும் மனிதர் நிலைத்து நின்றால்,

நன்றாய்க் காண்பர் அதிசயம்.

சும்மாச் சொல்லி செல்வது என்றால்,

சொல்லால் வருமோ அதிசயம்?

செம்மொழித் தமிழில் எழுதித் தந்தால்,

சேர்ப்பீரா இறை அதிசயம்?

இம்மாப் பற்று பெருகி வந்தால்,

யாவரும் காண்போம் அதிசயம்.

ஆமென்.

May be an image of text that says 'STAND FIRM'