உண்மை அறியும் முன்னே!

உண்மை அறியும் முன்னே!

இறை மொழி: யோவான் 20:1-2.

1. வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.

2. உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

இறை வழி:

இருந்த கல்லும் அங்கே இல்லை;

இயேசு உடலும் தெரியவில்லை.

வருந்தி சென்ற மகதல மரியும்,

வந்த நிகழ்வை அறியவில்லை.

புரிந்து ஒன்றை அறியும் முன்னே,

பேசுமுரையில் உண்மையில்லை.

திருந்தி நாமும் தெளிவாய் நோக்கி,

தேடாதிருப்பின் நன்மையில்லை!

ஆமென்.

May be an image of text