அமைதி!

அமைதி!

இறை மொழி: யோவான் 20:19-20.

19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இறை வழி:

அடையாத பொருட்கள் இங்கிருப்பின்,

அவற்றில் ஒன்று அமைதியாம்.

உடையாத நெஞ்சம் எங்குமில்லை;

ஊர் தராது நிம்மதியாம்.

கிடையாத மனிதர் தேடித்திரிகையில்,

கிறித்து வந்து தருவராம்.

மடையாக ஊற்றும் காயம் பாரும்;

மா அமைதி பெறுவராம்!

ஆமென்.

May be a doodle of text