ஏன் அழுகின்றாய்?

ஏன் அழுகின்றாய்?

இறை மொழி: யோவான் 20:15.

15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்றாள்.

இறை வழி:

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே,

ஏன் நெஞ்சே நீ அழுகின்றாய்?

நன்னாயர் இயேசு காக்கையிலே,

நம்பாது யாரைத் தொழுகின்றாய்?

உன் கண்ணீர் கவலை நொறுக்கையிலே,

உன்னுடன் இருப்பவர் அவரல்லவா?

இன்னாளில் இதனை மறக்கையிலே,

இழப்பது வாழ்வு, தவறல்லவா?

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Woman, why are you weeping?" John 20,15'