உணவாம் ஆண்டவர்!

இறை மொழி : யோவான் 21:9-11.

9. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.

11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இறை வழி:

உழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு.

உண்ண உண்ண, இன்பம்.

பிழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு;

பின்னால் வருமே துன்பம்.

அழைத்தவர் தருகிற உணவும் உண்டு.

அதுதான் மா பெரும் இன்பம்.

தழைக்கச் செய்யும் இறையும் உண்டு;

தரார் நமக்குத் துன்பம்!

ஆமென்.

May be an image of table, banner, tablecloth and text that says 'The Lord's Table'