முன்னே ஓடிய யோவான்!
இறை மொழி: யோவான் 20:3-5.
3. அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
4. பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
5. அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
இறை வழி:
முன்னே ஓடும் வலிமை பெற்றும்,
முதிர்ச்சி அற்றதால் நிற்கின்றான்.
பின்னே இதனை உணர்ந்து சற்றும்
பெருமை அற்றுச் சொல்கின்றான்.
தன்னை முழக்கும் தம்பட்டமல்ல,
தலைவனின் மாண்பே நற்செய்தி.
இன்னாள் இதனைப் புரியும் நல்ல,
இறைப்பணி இலாமை, துர்ச்செய்தி!
ஆமென்.
![May be an image of 2 people](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/408023118_7141048532592554_8091672685846806712_n.jpg?stp=dst-jpg_p843x403&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=TzJyQ6taB8AAX86itbB&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfCPbM1AaQ66Xk_xEsIfxTWTcNHlM4bNouhC7_G8UjXQ3w&oe=657490E3)