முன்னே ஓடிய யோவான்!

முன்னே ஓடிய யோவான்!

இறை மொழி: யோவான் 20:3-5.

3. அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

4. பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,

5. அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

இறை வழி:

முன்னே ஓடும் வலிமை பெற்றும்,

முதிர்ச்சி அற்றதால் நிற்கின்றான்.

பின்னே இதனை உணர்ந்து சற்றும்

பெருமை அற்றுச் சொல்கின்றான்.

தன்னை முழக்கும் தம்பட்டமல்ல,

தலைவனின் மாண்பே நற்செய்தி.

இன்னாள் இதனைப் புரியும் நல்ல,

இறைப்பணி இலாமை, துர்ச்செய்தி!

ஆமென்.

May be an image of 2 people