நம்பு!

நம்பாமை!

இறை மொழி: யோவான் 20:24-25.

24. இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

இறை வழி:

தும்பை பூக்கள் வெண்மை என்றால்,

தூய நெஞ்சே நம்பு.

வம்பை வளர்த்தல் தீது என்றால்,

வாதிடாமல் நம்பு.

அம்பும் வில்லும் வேண்டாமென்றால்,

அறிவுலகே நம்பு.

நம்பிக்கைதான் வாழ்வு என்றால்,

நண்பா நீயும் நம்பு!

ஆமென்.

No photo description available.