காண்கிறார்… ஆயினும்

காண்கிறார்… ஆயினும் அறியவில்லை!

இறை மொழி: யோவான் 20:14.

14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

இறை வழி:

இன்றும் இதுபோல் காண்கிற நாமும்

இயேசுவின் உயிர்ப்பை அறிந்தோமா?

நின்றும் குதித்தும் பாடும் போதும்,

நிலைவாழ் உயிர்ப்பு அறிவோமா?

நன்றாய்ப் பாடி, துள்ளிக் குதித்தோம்;

நற்பணி செய்யவே உயிர்த்தோமா?

அந்நாள் யாவரும் எழும்பும் காலம்,

அவருடன் ஆள உயிர்ப்போமா?

ஆமென்.

May be an image of 2 people