என்னைத் தொடாதே!

என்னைத் தொடாதே!

இறை மொழி: யோவான் 20:17.

17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

இறை வழி:

தன்னைத் தழுவும், உரிமை எடுக்கும்

தன்னலம் கண்ட இறைமகனார்,

என்னைத் தொடாது எட்டியே நில்லு,

என்கிற வாக்கின் பொருளறிவோம்.

இன்னிலம் காணும் இனிமை கொடுக்கும்;

ஈடிலா அன்பின் இறைமகனார்,

நன்மையெடுத்துப் பகிர்வதும் சொல்லு;

நல்ல சமத்துவ அருளறிவோம்!

ஆமென்.

May be an image of 2 people