பொறுத்திடும் திருப்பணி!

பொறுத்திடும் திருப்பணி!

இறை மொழி: யோவான் 20:21-23

21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

இறை வழி:

வெறுத்திடும் மனிதர் பெருத்திடும் போது

விண் மகன் ஊழியம் வழங்குகிறார்.

பொறுத்திடும் பண்பை வளர்த்திடும் தூது,

புனித ஆவியால் வழங்குகிறார்.

மறுத்திடும் பேச்சு சொல்பவர் வாது,

மறையும்படிக்கே வழங்குகிறார்.

திருந்திடுவோமெனில் தீமை வெல்லாது.

தெய்வப் பண்பே வழங்குகிறார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Without forgiveness there is no future."'