நன்மை செய்வதே வாழ்க்கை!

நன்மை செய்வதே வாழ்க்கை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:33-35.

33பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
கோழையர் அஞ்சிப் பறக்கையிலே,
கொடுமையில் உதவ மறக்கையிலே,
ஏழையரோ முன் வருகின்றார்;
இரங்கி, உதவிகள் தருகின்றார்.
தோழமை நாடும் மானிடரே,
தொண்டுளம் இருக்க ஏனிடரே?
வாழ்க்கை என்பது நன்மைக்கே;
வழங்குவீர் அதனை இன்றைக்கே!
ஆமென்.