இயேசுவின் காலடி!

ஆண்டவர் காலடி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:38-39.

38பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
எங்கே சென்றால் அமைதி கிட்டும்,
என்று அலைவார் நாட்டினிலே,
மங்கை மரியின் செயலைப் பாரும்;
மகிழ்ச்சி பெருகும் வீட்டினிலே.
இங்கே இவளது இருப்பிடம் தேடும்;
இயேசு வாழ்க்கை ஏட்டினிலே.
அங்கே ஆண்டவர் காலடி கண்டோம்;
அமைதி பிறக்கும் கூட்டினிலே!
ஆமென்.