தாழ்வில் இறங்குகிறார்!

தாழ்வில் இறங்கும் மானிடமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா: 10:29-30.

29அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கூழ், உடை, வீடு, பொருள் சேர்க்கக்
கொடுமையை ஆயுதம் ஆக்கிவிடின்,
தாழ்வில் இறங்குவாய் மானிடமே;
தவற்றைத் திருத்து இன்னாளே.
ஊழ்வினை என்று ஒதுக்காமல்,
ஒரே பிறவியின் பயனடைய,
வாழ்வெது சாவெது தெரிவாயே;
வருந்நாள் யாவும் பொன்னாளே!
ஆமென்.