காட்டுவீர் பெரிது!
நற்செய்தி: யோவான் 1:49-51.
நல்வழி:
கண்டவை சிறிது;
காட்டுவீர் பெரிது.
உண்டதும் குறைவு;
ஊட்டுவீர் நிறைவு.
மண்டையின் செருக்கு,
மடமையின் பெருக்கு;
கொண்டயென் திருப்பு,
கூறும் உம் விருப்பு!
-ஆமென்.
-செல்லையா.
The Truth Will Make You Free
காட்டுவீர் பெரிது!
நற்செய்தி: யோவான் 1:49-51.
நல்வழி:
கண்டவை சிறிது;
காட்டுவீர் பெரிது.
உண்டதும் குறைவு;
ஊட்டுவீர் நிறைவு.
மண்டையின் செருக்கு,
மடமையின் பெருக்கு;
கொண்டயென் திருப்பு,
கூறும் உம் விருப்பு!
-ஆமென்.
-செல்லையா.
அறிகிற ஆண்டவர்!
நற்செய்தி: யோவான் 1:47-48.
நல்வழி:
அத்திச் செடியின் அடியில் அமர்ந்து,
அடியார் வேண்டல் ஏறேடுத்தார்
புத்திக்கெட்டா அவரது விருப்பை,
புனிதர் இயேசு அறிந்திட்டார்.
முத்திப் பேறு விரும்பும் எவரும்,
முதற்கண் வேண்டல் ஏறெடுப்பார்.
கத்திக்கூச்சல் போட்டிட வேண்டாம்;
கடவுள் நெஞ்சை அறிகின்றார்!
ஆமென்.
-செல்லையா.
மாற்றாரை மதிப்போம்!
நற்செய்தி: யோவான் 1:45-46.
நல்வழி:
மாற்றார் மதித்தல் மறந்துவிடின்,
மதியில்லாமைப் படியேறும்.
தோற்றார் நிலையில் வீட்டாரும்,
துயரமடையக் குடியேறும்.
வேற்றார் வெறுத்தல் துறந்துவிடின்,
விண்ணே நம்மைப் படியேற்றும்.
தூற்றார் வாழும் நன்மைக்குள்,
தூய இறையே குடியேற்றும்!
ஆமென்.
-செல்லையா.
யாரைப் பின்பற்றுகிறோம்?
நற்செய்தி: யோவான் 1:43-44.
நல்வழி:
உள்ளம் நாடும் வழியில்தான்,
ஒவ்வொரு பேரும் நடக்கின்றார்.
வெள்ளம் ஓடும் தாழ்வில்தான்,
விழுந்து எழாது கிடக்கின்றார்.
பள்ளம் மேடும் தெரிந்தால்தான்,
பணையப்படாது கடக்கின்றார்.
கள்ளம் மூடும் கண் திறப்பீர்;
கடவுள் நம்மை மீட்கின்றார்!
ஆமென்.
-செல்லையா.
மணலும் பாறையாகும்!
நற்செய்தி: யோவான் 1:40-42.
மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும்,
தலை சிறந்த ஆண்டவரே,
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி,
குணமாய் நிறையும் குன்று ஆக்கும்,
கொல் கதாவில் மாண்டவரே!
ஆமென்.
-செல்லையா.
தங்குமிடம் எங்கே?
நற்செய்தி: யோவான் 1:37-39.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
நல்வழி:
தங்கு மிடம் இல்லாது,
தவியாய்த் தவித்தவரை,
இங்கு வந்து தங்கென்று,
யாரின்று இடம் கொடுத்தார்?
தொங்கு துணி நூல்போன்று,
தொடர்ந்தின்று பின் சென்றால்,
பங்கு ஒன்று இறை தருவார்;
பரன் வீடே கொடுப்பார்!
ஆமென்.
-செல்லையா.
தெய்வத்தின் பலியாடு!
நற்செய்தி: யோவான் 1:35-36.
நல்வழி:
தவற்றின் முடிவு தண்டனையாகும்.
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்?
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.
இவற்றைத் திருத்த யாராலாகும்?
இறைவனால்தான் தண்டனை போகும்.
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும்,
ஆண்டவராலே இறப்பும் போகும்!
ஆமென்.
-செல்லையா.
புறா!
நற்செய்தி: யோவான் 1: 32-34.
நல்வழி:
வராதிருந்தவர் வருவாரென்றால்,
வருகைக்கென்ன அடையாளம்?
புறாயிறங்கி அவர்மேல் அமரும்;
புனிதர் பணியும் தொடங்கிவிடும்.
சுறா விழுங்கல் போல் பலரும்,
சுற்றுங் காட்சி அட்டூழியம்.
இராதவரை நினையாரென்றால்,
இறை அமைதி முடங்கிவிடும்!
ஆமென்.
-செல்லையா.
எல்லாம் கற்றபின் ஊழியமா?
நற்செய்தி: யோவான் 1:29-31.
நல்வழி:
எல்லாம் கற்றபின் ஊழியமென்றால்,
எவரும் செயாமல் சாவாரே.
சொல்லாம் இறையின் சொல் தரக்கேட்டு,
சொற்படி நடப்பின் ஆவாரே.
பொல்லாப் புவியைத் திருத்தும் பணியை,
புனிதர் தருவார் பெறுவீரே.
இல்லார் என்ற இழிசொல் நீங்கும்;
இயேசு போதும், வருவீரே!
ஆமென்.
-செல்லையா.