கற்றபின் ஊழியமா?

எல்லாம் கற்றபின் ஊழியமா? 
நற்செய்தி: யோவான் 1:29-31.  

நல்வழி: 
எல்லாம் கற்றபின் ஊழியமென்றால்,  
எவரும் செயாமல் சாவாரே.  
சொல்லாம் இறையின் சொல் தரக்கேட்டு, 
சொற்படி நடப்பின் ஆவாரே. 
பொல்லாப் புவியைத் திருத்தும் பணியை,  
புனிதர் தருவார் பெறுவீரே.  
இல்லார் என்ற இழிசொல் நீங்கும்;   
இயேசு போதும், வருவீரே!  
ஆமென்.  
-செல்லையா.  

Leave a Reply