தங்குமிடம்!

தங்குமிடம் எங்கே?  
நற்செய்தி: யோவான் 1:37-39.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.  
39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.


நல்வழி:  


தங்கு மிடம் இல்லாது, 

தவியாய்த் தவித்தவரை,  

இங்கு வந்து தங்கென்று, 

யாரின்று இடம் கொடுத்தார்? 

தொங்கு துணி நூல்போன்று, 

தொடர்ந்தின்று பின் சென்றால், 

பங்கு ஒன்று இறை தருவார்; 

பரன் வீடே கொடுப்பார்! 


ஆமென்.


-செல்லையா. 

Leave a Reply