புறா!
நற்செய்தி: யோவான் 1: 32-34.
நல்வழி:
வராதிருந்தவர் வருவாரென்றால்,
வருகைக்கென்ன அடையாளம்?
புறாயிறங்கி அவர்மேல் அமரும்;
புனிதர் பணியும் தொடங்கிவிடும்.
சுறா விழுங்கல் போல் பலரும்,
சுற்றுங் காட்சி அட்டூழியம்.
இராதவரை நினையாரென்றால்,
இறை அமைதி முடங்கிவிடும்!
ஆமென்.
-செல்லையா.