தரணி மீட்புற வேண்டும்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்! ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்! ஆமென்.

உயிரின் உறைவிடம் இயேசு!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 8:51-53.

52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். கிறித்துவில் வாழ்வு: கழன்று விழுந்திடும் கண்ணீரோடு, கவலை கொள்ளும் மானிடமே, உழன்று புரண்டு அழுவது நிறுத்து. உன் கண் ஏறெடு வானிடமே. சுழன்று அடிக்கும் சூறைக்காற்று, சொற்படி நிற்பது இறையிடமே. இழந்து போமோ ஏழையின் மூச்சு? இயேசு உயிர்க்கு உறைவிடமே! ஆமென்.