நடுவர் முன்பு என்செய்வேன்?

நடுவர் முன்பு என்செய்வேன்?
கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:11-12.

11அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அடிப்பார், உதைப்பார், அவமதிப்பார்;
அவரது அறிவினில்தான் நடப்பார்.
பிடிப்பார், இழுப்பார், வழக்குரைப்பார்;
பொய்ச் சான்றினில்தான் கிடப்பார்.
இடிப்பார் இவருக்கில்லையென்பார்.
இல்லை, இறைவன்தான் காப்பார்.
துடிப்பார் மீள என்செய்வார்?
தூய வாக்கால்தான் மீட்பார்!
ஆமென்.