புளித்த மாவு!

புளித்த மாவு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:1.

1அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சிறு புளித்துண்டு மாவில் விழவே, 
சேர்த்து பானையில் கொட்டிவைத்தேன்.
இரு பெருங்காலம் கடந்த பிறகே,
யானும் நினைந்து, கட்டவிழ்த்தேன்.
அருவருப்பான வாடை எழவே,
அப்புளிப் பானையைப் போட்டுடைத்தேன்.
பெருமையும் இதுபோல் பரவுதல் கண்டே,
பேரிடர் ஒழிக்கப் பாட்டெடுத்தேன்! 
ஆமென்.