அஞ்சாதீர்!

அஞ்ச வேண்டாம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:4-5.

4என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அஞ்சி அஞ்சி அழுவதற்கென்றே
ஆண்டவர் நம்மைப் படைத்தாரா?
மிஞ்சி மிஞ்சித் துன்பம் தரவே,
மீட்பரும் துணையாய்க் கிடைத்தாரா?
கொஞ்சங்கூட அறிவில்லார்தான்,
குறையுள்ள மனிதனுக்கஞ்சுகிறார்.
தஞ்சமென்று கிறித்துவைப் பார்ப்பார்,
தாங்கும் அவருடன் கொஞ்சுகிறார்!
ஆமென்.