மறவாதவர்!

குருவியையே மறக்கவில்லை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:6-7.

6இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தலை மயிரை எண்ணியறியேன்.
எத்தனையென்று இறையறிவார்.
இந்நிலைதானே எவரிலுமென்பேன்;
இறைவறிவாழம் யாரறிவார்?
மந்தமாய்ப் பறக்கும் குருவியைக்கூட, 
மறவாதவர்தான் நல்லிறைவன்.
வெந்தணல் வெறியர் வென்றிடுவாரோ?
விடுதலையாளரே நம்மிறைவன்!
ஆமென்.