குருவியையே மறக்கவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:6-7.
6இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. |
7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கிறித்துவில் வாழ்வு: எந்தலை மயிரை எண்ணியறியேன். எத்தனையென்று இறையறிவார். இந்நிலைதானே எவரிலுமென்பேன்; இறைவறிவாழம் யாரறிவார்? மந்தமாய்ப் பறக்கும் குருவியைக்கூட, மறவாதவர்தான் நல்லிறைவன். வெந்தணல் வெறியர் வென்றிடுவாரோ? விடுதலையாளரே நம்மிறைவன்! ஆமென். |