குத்தகை என்று எண்ணி….

குத்தகை என்றே எண்ணுவோம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:13-14.

13அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
14அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சொத்திற்காகச் சொந்தம் பகைக்கும்,
சொல்லை விரும்ப உலகோர்க்கு,
வித்தை செய்து, பங்கு பிரிக்கும்,
வேலை செய்யுமோ விண்ணரசு?
மொத்தச் சொத்தும் இறையீவாகும்,
மீட்பு நிலை கண்டோர்க்குக்
குத்தகையென்றே எண்ணத் தோன்றும்,
கொடுக்கப்பட்ட மண்ணரசு!
ஆமென்.