பொறுக்கப் படுவீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:10.
10எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.


கிறித்துவில் வாழ்வு:


சொல்லும் கிறித்துவை நம்பார் பின்னர்,

சொற்படி நடந்தால் மீட்படைவார்.

வெல்லும் ஆவியர் செயலின் முன்னர்,

வெறுப்புமிழ்ந்தால் கேடடைவார்.

கொல்லும் கொடிய வாக்குரைப்பார்,

குறைகளுணர்ந்தால் அருளடைவார்.

நில்லும் என்று உரைத்தும் கேளார்,

நேர்வழி காணா இருளடைவார்!


ஆமென்.

Leave a Reply