உடல், பொருள், ஆவி !

உடல், பொருள், ஆவி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:15.

15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உடல், பொருள், ஆவி மூன்றுமிருக்க,
உடலின் தேவையைத் தேடுகிறோம்.
கடல் அலை போன்று அவாவும் தொடர, 
காசினைப் பெருக்க ஓடுகிறோம்.
அடல் வெறி கொண்டு அடுக்கும் பொருளோ,
அழிவது கண்டு வாடுகிறோம்.
மடயரின் வரிசையில் நின்றது போதும்;
மறைநூல் வாக்கை நாடிடுவோம்!
ஆமென்.

Leave a Reply