நற்செய்தி: யோவான் 8: 22.
நல்வழி:
உன் பிறப்பு, உன் விருப்பா?
உண்மை அது இல்லை.
என் இறப்பு, என் முடிவா?
எனக்குரிமை இல்லை.
தன் பிறப்பின் நோக்கறிவின்,
தவறுமிடம் இல்லை.
நன் வாழ்வு, நம் இறையில்;
நம்பின், குறைவில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நற்செய்தி: யோவான் 8: 22.
நல்வழி:
உன் பிறப்பு, உன் விருப்பா?
உண்மை அது இல்லை.
என் இறப்பு, என் முடிவா?
எனக்குரிமை இல்லை.
தன் பிறப்பின் நோக்கறிவின்,
தவறுமிடம் இல்லை.
நன் வாழ்வு, நம் இறையில்;
நம்பின், குறைவில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தீங்கின் முடிவு!
நற்செய்தி: யோவான் 8:20-21.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.
நல்வழி:
தீங்கை விற்கும் தீமையாளர்,
தெய்வ மீட்பை வாங்காரே.
ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,
இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.
வாங்கி விற்கா மீட்பையருள்வார்;
வல்லமை இறையும் தூங்காரே.
தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;
தனையன் அன்பில் நீங்காரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி …6.
அன்பு!
தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;
தருகிற இறையிடம் கற்பாயா?
உன்னினம் கடந்து உதவும் பண்பு,
உண்மை அறமென நிற்பாயா?
-செல்லையா.
மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!
நற்செய்தி: யோவான் 8:19.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
நல்வழி:
பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,
பேதமை இல்லாக் கருத்தவராய்,
கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,
காணாத் தந்தையை, பழிக்கிறோம்.
உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,
ஓவாச் செயலே செய்பவராய்,
வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,
விண் பாராது, முழிக்கிறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி…5
இறைவழி!
திருவடி அடையும் பெருவழி கேட்டேன்.
தெரியா வழிகள் சொன்னார்கள்.
ஒரு வழி கண்டு, உட்புகுந்திட்டேன்.
இறைவழி அன்பு என்பார்கள்!
-செல்லையா.
நாலடி நற்செய்தி…4.
இறைவிருப்பு!
எதைச் செய்தாலும் இறை விருப்பா,
என்று பார்த்தல் நம் கடமை.
இதைச் செய்யாமல் ஒரு பொறுப்பா?
இழப்போம் நெஞ்சின் தனியுடமை!
-செல்லையா.
சான்று!
நற்செய்தி:யோவான் 8:17-18.
நல்வழி:
இருவர் சான்று ஒன்றாய் இருப்பின்
ஏற்றுக் கொண்டது திருச்சட்டம்.
ஒருவர் தந்தை, ஒருவர் மைந்தன்;
ஒன்றாய்த் தருவது இறைத்திட்டம்.
திருடர், பொய்யர், வாக்கை நம்பி,
தேய்ந்து போகுது ஒரு கூட்டம்.
பெருமை விட்டு, தாழ்மை பூண்ட,
பேரொளி அறிவே பரவட்டும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இறையறிவு!
நாலடி நற்செய்தி…3.
இறையறிவு!
உம்மாலே நான், உமக்கென்றே நான்;
உணர்ந்து வாழ்வதே இறையறிவு.
இம் மா அறிவை இறையே தருவான்.
இறைவழி வாழ்வே நிறையறிவு!
-செல்லையா.
நாலடி நற்செய்தி…2.
அறிவு!
அன்பின் செயலே அறிவின் சிறப்பு.
அதை அடைய உழைப்போமே.
நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.
நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!
-செல்லையா.
இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.
நல்வழி:
ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,
ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.
வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.
விண்ணின் முடிவு நன்றேயாம்.
கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,
குற்றம் தவிர்ப்பது என்றேயாம்?
மாண்டபின் பேசிப் பயனேயில்லை.
மனிதா திருந்து, இன்றேயாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.