மகனைக் கண்டு!

மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!

நற்செய்தி: யோவான் 8:19.  

19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.   


நல்வழி:

பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,

பேதமை இல்லாக் கருத்தவராய்,

கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,

காணாத் தந்தையை, பழிக்கிறோம்.

உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,

ஓவாச் செயலே செய்பவராய், 

வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,

விண் பாராது, முழிக்கிறோம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.