பாலை நிலம் வழி செல்லும் நாளில், 

பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,

காலை தொட்டு மாலை வரையில், 

கடுஞ்சினத்துடன் தேடினார்.

கோலை எடுத்து மோசே அடிக்க, 

கொடுக்கும் பாறை கிறித்துவால்,

நாளை உயிர் நீர்  நாமும் பெறுவோம்;

நம்பாதவர்தான் வாடினார்!

(விடுதலைப் பயணம் 17:1-7).