தீமை!

தீங்கின் முடிவு!  


நற்செய்தி: யோவான் 8:20-21.


20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.  


நல்வழி: 


தீங்கை விற்கும் தீமையாளர்,

தெய்வ மீட்பை வாங்காரே.

ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,

இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.

வாங்கி விற்கா மீட்பையருள்வார்;

வல்லமை இறையும் தூங்காரே. 

தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;

தனையன் அன்பில் நீங்காரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.