நிலைத்தவை!

நிலைத்தவை எவை?

நிலைத்தவை எவையென மனிதர் கேட்டார்.

நெஞ்சில் வைக்க என்னென்பேன்?

குலைத்திட முயன்றவர் மறுக்க மாட்டார்.

கொடுக்கும் இறை அன்பென்பேன்.

மலைத்திடச் செய்யும் மற்றொன்றென்றார்.

மானிடர் மீட்பு தான் என்பேன்.

விலைக்கு இல்லை, விரும்பித் தந்தார்;

விண் வாக்கிலே நான் கண்டேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பி.கு. நிலைத்தவை எவை?

1. இறை அன்பு/அருள்

2. இறை அரசு/மீட்பு/வாழ்வு

3. இறை வாக்கு

பிரிவு!


பிரிவு!
இறை மொழி: யோவான் 16:31-32.

31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.

32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

இறை வழி:

தொட்டு, தொட்டுப் பார்த்தவர் 
துணையாக இருந்தவர், 
விட்டு, விட்டுப் போகிறார்.
விண் மகனோ வருந்தவில்லை.
கட்டு கட்டாய் இணைத்தவர்,
கண் மணியாய்க் காப்பவர்,
கெட்டு விழக் கைவிடார்; 
கேட்டும் ஏன் திருந்தவில்லை?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.