நிலைத்தவை!

நிலைத்தவை எவை?

நிலைத்தவை எவையென மனிதர் கேட்டார்.

நெஞ்சில் வைக்க என்னென்பேன்?

குலைத்திட முயன்றவர் மறுக்க மாட்டார்.

கொடுக்கும் இறை அன்பென்பேன்.

மலைத்திடச் செய்யும் மற்றொன்றென்றார்.

மானிடர் மீட்பு தான் என்பேன்.

விலைக்கு இல்லை, விரும்பித் தந்தார்;

விண் வாக்கிலே நான் கண்டேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பி.கு. நிலைத்தவை எவை?

1. இறை அன்பு/அருள்

2. இறை அரசு/மீட்பு/வாழ்வு

3. இறை வாக்கு