ஒன்றாய் இருப்போம்!

ஒன்றாயிருப்போம்!

இறை மொழி: யோவான் 17:11. 

இறை வழி:

தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து  

தரணியை ஆள்வது போன்று,

மைந்தர்கள் என்கிற அடியவர் சேர்ந்து,

மாண்பாய்த் தொழுவது சான்று.

முந்தையர் செய்த வன்முறை வெறுத்து, 
முதலில் அன்பைப் பெற்று,

மந்தையைக் காக்க ஒன்றாய் நிறுத்து;

மாற்றும் இறை கூற்று!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.